அவுஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான பிரிஸ்பேன் (Brisbane) அருகே உள்ள அரிய கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரையினை நோக்கி வீசும் சுழல் காற்று நாளை (07) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கரையோரங்களில் 500 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.