இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சோமாலிய நிறுவனத்திற்காக Dhanusha Marine இந்தக் கப்பலை தயாரித்துள்ளது. இது இலங்கையின் உற்பத்திப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.