முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது 2010ல் கிரிபத்கொடையில் புதிய நகரம் அமைப்பதற்காக அரசால் கையகப்படுத்திய காணியாகும். இக் காணி மோசடிக்கு தொடர்புடைய மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.