கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88) நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 14-ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இவர் மருத்துவமணையில் சிகிற்சை பெற்று வந்தமையினால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.