சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் 3 வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையம் சென்றனர்.
8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கினர்.
தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16 ஆம் திகதி பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.