சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகன் (52). இவருடைய மனைவி சுமதி (47) வழக்கறிஞராக இருந்தார். இவருக்கு ஜஸ்வந்த் (19) மற்றும் லிங்கேஷ் குமார் (17) என்று இரு மகன்கள் கடன் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் பால முருகனுக்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், கந்து வட்டி தொல்லை இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.