9.6 C
Cañada
March 13, 2025
இலங்கை

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் அவரது வீட்டில் நடந்ததாகவும், அவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத் தம்மிக்க என்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடையாளம் தெரியாத நபர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்திற்குப் பின்னணி தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடந்து மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related posts

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம்

admin

நாவுல பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பலி

admin

Leave a Comment