அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் 23 வயது இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.