9.6 C
Cañada
March 13, 2025
இலங்கை

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம்

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் அதிக அளவில் ஈடுபடுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் 15 முதல் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கும் பரவிவிட்டதாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் 1,62,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 92,000 முதல் 1,00,000 பேர் வரை போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமைகளாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

மட்டுவில் வாள்வெட்டு – இருவர் படுகாயம் – ஆவா குழுவின் பழிவாங்கலா?

admin

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் கைது

admin

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

Leave a Comment