3.5 C
Cañada
March 15, 2025
இலங்கை

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் அவரது வீட்டில் நடந்ததாகவும், அவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத் தம்மிக்க என்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடையாளம் தெரியாத நபர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்திற்குப் பின்னணி தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடந்து மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு- விசாரணை குழு நியமிப்பு

admin

இந்தியாவில் இருந்து பஸ்கள் வாங்கப்பட்டமை தொடர்பான வெளிக்கொணர்வு

admin

Leave a Comment