3 C
Cañada
March 15, 2025
விளையாட்டு

இங்கிலாந்து வீரர் ப்ரூக் 2 ஆண்டுகளிற்கு ஐபிஎல் விளையாட தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக் (Harry Brook) இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். IPL 2025 தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BCCI (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) இனால் முன்பே அறிவித்தது போல, IPL ஏலத்தில் இடம்பெற்ற பிறகு போட்டியில் விளையாட மறுக்கும் எந்தவொரு வீரருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.

ஹாரி ப்ரூக் இதை மீறி உலகளாவிய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என IPL-ல் இருந்து வெளியேறினார். இதனால் BCCI இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் (ECB) ப்ரூக்கிற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளது.

Related posts

கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் மாஸ்டர் லீக் போட்டி இன்று – சங்கா VS டெண்டுல்கர்

admin

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

admin

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்

admin

Leave a Comment