4.6 C
Cañada
March 16, 2025
இலங்கை

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதத்திலிருந்து நடைமுறையில்

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

admin

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்

admin

Leave a Comment