10.7 C
Cañada
March 16, 2025
இலங்கை

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தையை வீசி எறிந்த பெண் – சடலமாக மீட்கப்பட்ட சிசு

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில் இன்று (15.03.2025) காலையில் உயிரிழந்த ஆண் சிசு ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

ஆண் சிசு ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டி அதனை மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் அக் குழந்தை இன்று பிறந்த குழந்தை எனவும், பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர். 

Related posts

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண்

admin

இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்

admin

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

admin

Leave a Comment