இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணத்தை அவரது ஏ.ஆர். அமீன் தெளிவுபடுத்தியுள்ளார்.
“எனது தந்தை ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்து(நீரிழப்பு) குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தற்போது அவர் நலமாக உள்ளார்” என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி விட்டதாகவும் ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.