13 C
Cañada
March 20, 2025
இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு கலாசாரம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை.

நேற்றைய தினம் மட்டும் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றிரவு கொழும்பு கிரான்பாஸ் நாகலங் வீதியில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், இலங்கையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகும்.

Related posts

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை: பிமல் ரத்நாயக்க

admin

Leave a Comment