மலையாள திரையுலகில் அறிமுகமான மமிதா பைஜூ, தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான பிரேமலு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் ‘ரெபல்’ படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து அறிமுகமானார்.
இப்போது, மமிதா தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தை பற்றி மமிதா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அடுத்த மாதத்திலிருந்து ‘ஜனநாயகன்’ படத்திற்கான அப்டேட்கள் தொடர்ந்து வரும் எனவும், படம் வேற லெவலில் உருவாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் sir-ஐ புதிய கோணத்தில் காணலாம் என்றும், தரமான சம்பவங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.