6 C
Cañada
March 25, 2025
உலகம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 85 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாயன்று காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களுடன், வடக்கு பெய்ட் லஹியாவில் உள்ள வீடுகளும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களில் சுமார் 85 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சூறாவளி எச்சரிக்கை

admin

இஸ்ரேலில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய மூன்று பஸ்கள்

admin

Leave a Comment