சூடான் இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடானிய ஆயுதப் படைகள் (SAF), கார்ட்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஒளிபரப்பாளர்களும் சர்வதேச செய்தி நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களில், அழிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்குள் SAF வீரர்கள் இருப்பது காணப்பட்டது.
மேலும், தலைநகரின் சில மையப் பகுதிகளில் இடைவிடாது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சாட்சிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.