அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கையில், கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா போன்ற நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.
இந்த நபர்கள், கடந்த ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டம் மூலம் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவர்கள் 2 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தனர்.
இப்போது, சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள சூழ்நிலையில் உள்ளனர்.