8.5 C
Cañada
March 23, 2025
உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியோரின் சட்ட பாதுகாப்பு ரத்து

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நடவடிக்கையில், கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா போன்ற நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.

இந்த நபர்கள், கடந்த ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டம் மூலம் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவர்கள் 2 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தனர்.

இப்போது, சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள சூழ்நிலையில் உள்ளனர்.

Related posts

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

admin

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin

ரத்துச்செய்யப்பட்ட லண்டனுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள்

admin

Leave a Comment