17.9 C
Cañada
April 1, 2025
இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் சிக்கன்குன்யா 

கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கன்குன்யா நோய் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நோயின் பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியமானது.

நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்கன்குன்யா பரவலை கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர்கள் கூறுகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்ட நுளம்புகள் மனிதர்களை கடிக்கும்போது, நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்லும் போது, நோய் பரவும் அபாயம் இருக்கிறது.

பாடசாலை விடுமுறையின் காரணமாக குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று வரக்கூடிய சூழல் காணப்படுகின்றது. அதேசமயம், சில இடங்களில் மழைக்காலம் அதிகரிக்கின்றதால், நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருந்து, சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

போதிய முதலுதவி வசதி இல்லாமையால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

admin

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் கருணா அம்மானிற்கும் பிரித்தானியா செல்ல தடை விதிப்பு

admin

அனுராதபுர சம்பவத்தினை முன்னிட்டு மருத்துவர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

admin

Leave a Comment