6.7 C
Cañada
March 28, 2025
இலங்கை

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் கருணா அம்மானிற்கும் பிரித்தானியா செல்ல தடை விதிப்பு

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா, மற்றும் கருணா அம்மான் ஆகியோர் மீது தடை விதிப்பதாக பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது. 

உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவதையும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது. மேலும் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகிய நடவடிக்கைகள், இந்த தடையில் அடங்கியுள்ளன.

Related posts

பதவியில் இருந்து விலகப் போவதாக சபையில் அறிவித்த அர்ச்சுனா எம்.பி

admin

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

தலதா மாளிகைக்கான நன்கொடை குறித்து போலி விளம்பரங்கள்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

admin

Leave a Comment