இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல் லத்தீப் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு காசா பகுதியில் அவர் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.