எகிப்தியின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹுர்காடா அருகே சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 ரஷ்யர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 39 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வியாழக்கிழமை ஹுர்காடா கடற்கரையோர சுற்றுலா தளத்தில் இடம்பெற்றுள்ளது. “சின்ட்பாட்” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 45 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5 எகிப்திய பணியாளர்களுடன் கடலில் சென்றபோது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் திடீரென மூழ்கியது.
விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. விபத்து நேரத்தில் வானிலை தெளிவாகவும் கடலில் நல்லக் காட்சியமைப்பும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.