இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 26 வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தின் முதல் 26 நாட்களிலேயே 191,982 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த வருடம் மொத்தமாக 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.