11.3 C
Cañada
March 20, 2025
இலங்கை

படலந்த விவகாரத்தினை முன்னிட்டு ரணிலின் குடியுரிமையை இரத்து செய்ய கோரிக்கை

இலங்கையில் 1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு, சர்ச்சைக்குரிய பட்டலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய ஆணையத்தை நியமிக்க வேண்டும் என அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை மக்கள் போராட்ட கூட்டணி அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது. இந்நிலையில், இந்த கோரிக்கையை பின்பற்ற சற்று முன்பு பொலன்னறுவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குழு உரையாற்றியது.

மேலும், அரசாங்கத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவே பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தையை வீசி எறிந்த பெண் – சடலமாக மீட்கப்பட்ட சிசு

admin

அர்ச்சுனாவின்உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு தடை

admin

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula

Leave a Comment