5.2 C
Cañada
March 14, 2025
உலகம்

சிரியாவில் பதற்றம்- 200 பேர் பலி

சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நேற்று முன்தினம்(6) முதல் மோதல் நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இச் சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை ஒன்றிணைக்க புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் குறைந்தது 50 சிரிய அரசுப் படைகளும், 45 முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவினரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. 

Related posts

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுதான் காரணம்! இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி விமர்சனம்

admin

கனேடிய மக்களிடையே வேலை இழப்பு குறித்த பதற்றம் அதிகரிப்பு

admin

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க் மற்றும் ரூபியோ இடையே கடும் வாக்குவாதம்

admin

Leave a Comment