5.7 C
Cañada
March 15, 2025
இலங்கை

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு- விசாரணை குழு நியமிப்பு

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்களில் வந்த இருவரால் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் இருந்த இருவர் மீது நேற்றிரவு(08) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த இருவரும் கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

யாழ்- இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

admin

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

யாழ் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது

admin

Leave a Comment