சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.
டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு ட்ரம்ப் அனுமதி வழங்கியதுடன், இதற்காக 75 நாட்கள் கால அவகாசமும் அளித்திருந்தார்.
ஆரக்கிள், வோல்மார்ட் போன்ற நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.