5.7 C
Cañada
March 15, 2025
உலகம்

கனேடிய மக்களிடையே வேலை இழப்பு குறித்த பதற்றம் அதிகரிப்பு

கனடாவில் வேலை இழப்புகள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தக போரின் காரணமாக வேலை வாய்ப்புகள் குறைவதற்கான அச்சம் அதிகரித்துள்ளதாக 40% கனடியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பல தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மார்ச் 7 முதல் 10 வரை நடத்தப்பட்ட லெஜர் கருத்துக்கணிப்பில், 1,500க்கும் மேற்பட்ட கனடியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், ஒண்டாரியோ மாநிலத்தில் 50%-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேலை இழப்புக்கான அச்சம் பெண்களை விட ஆண்களில் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரிலும் வேலை பற்றிய கவலை இருந்ததால், கனடாவின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் பயணிகளிற்கான புதிய கட்டுப்பாடுகள்

admin

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

admin

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

admin

Leave a Comment