இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக் (Harry Brook) இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். IPL 2025 தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
BCCI (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) இனால் முன்பே அறிவித்தது போல, IPL ஏலத்தில் இடம்பெற்ற பிறகு போட்டியில் விளையாட மறுக்கும் எந்தவொரு வீரருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.
ஹாரி ப்ரூக் இதை மீறி உலகளாவிய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என IPL-ல் இருந்து வெளியேறினார். இதனால் BCCI இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் (ECB) ப்ரூக்கிற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளது.